Saturday 18 July 2009

ஏமாந்த பூனை...



ஓர் வீட்டில் ஒரு பூனை இருந்தது.

ஒரு நாள் அந்தப் பூனை ஓர் எலியைப் பிடித்தது. எலியைக் கடித்துத் தின்ன விரும்பியது.

எலி பூனையைப் பார்த்து, " பூனை மாமா! பூனை மாமா! பல்லைத் துலக்கி வந்து என்னைச் சாப்பிடுங்கள். நான் மிகவும் ருசியாக இருப்பேன் ". என்று கூறியது.

பூனை, " சரி. இங்கேயே இரு. நான் குளிக்கும் அறைக்குப் போய், பல் துலக்கி வருகிறேன் ". என்று சொன்னது.

" சரி, சீக்கிரம் வந்து என்னைச் சாப்பிடுங்கள் ". என்று எலி கூறியது. பூனை குளிக்கும் அறைக்குள் போயிற்று.

எலி துள்ளிக் குதித்து ஓடி மறைந்து விட்டது. பூனை ஏமாந்து போனது.


நன்றி பாலர்போதினி.

1 comment:

  1. படத்தில் இருக்கும் "எலி"யைக் கண்டு "பூனை" தான் பயந்து ஓடுவது பழக்கம்!

    ReplyDelete